Tuesday 4 November 2014

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014

கொள்கையற்றவர்கள் யார்? 

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-2 நேரம்: 11:00-11:30


ஸிஹ்ரு எனும் சொல்லுக்குக் கீழ்க்காணும் காணொளியில் மட்டும்
1. ஏமாற்று வித்தை
2. பொய்
3. போலித் தோற்றம்

ஆகிய 3 சொற்களைத் ததஜவினர் தர்ஜுமா செய்தார்கள். அடுத்தடுத்து வேறு பல சொற்களையும் சேர்த்துச் சொன்னார்கள்.


1984இல் சூனியத்தை எதிர்த்த தாருத் தவ்ஹீத் அமைப்பினர் 2014இல் ஏன் ஆதரிக்கின்றார்கள்? என்ற் கேள்வியைத் ததஜவினர் வைத்தனர்.


1984இல் குர்ஆன் ஹதீஸ் ஆகிய இரண்டை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எதிர்த்தோம்; இப்போதும் எதிர்க்கிறோம். குர்ஆன் ஹதீஸை விடுத்து, 2014வரை பலமுறை மாற்றப்பட்ட மூன்றாவது அடிப்படையான மனித அடிக்குறிப்புளைத்தான் ஏற்க மறுக்கிறோம். தனிமனிதக் கருத்துகளை ஏற்றுக்கொள்ளுமாறு மற்றவர்களை நிர்ப்பந்திக்க எவருக்கும் உரிமை இல்லை.
"ததஜ ஒப்புக்கொண்டால் சூனியத்தைப் பற்றித் தனியாக விவாதிக்கலாம்" எனக் கேட்டதற்கு பதில் சொல்லாமல் திரும்பத் திரும்ப சூனிய மாவையே ததஜவினர் அரைத்தனர்.

மார்க்க மஸாயில் ஒன்றில் இருவேறு கருத்து உள்ளவர்கள் ஒரு மேடையில் பேசக்கூடாது என்பதற்குக் குர்ஆன் - ஹதீஸ் ஆதாரம் என்ன? எனும் கேள்விக்குத் ததஜவிடம் பதிலே இல்லை.

No comments:

Post a Comment