Tuesday 4 November 2014

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு

கொள்கையற்றவர்கள் யார்?

அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-3 நேரம்: 11:30-12:00

அதிரையில் அல்லாஹ்வின் அருளால் ஏகத்துவக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றைக் கொச்சைப் படுத்திப் பேசும் செய்யது இபுராஹீம் என்பவர், முதலாம் அமர்வின் முதல் உரையில் ஒரு பைலாவை வைத்துக்கொண்டு, "இதற்குள் வராதவர்கள் காஃபிர்கள் என்று ஃபத்வாக் கொடுப்பவர்கள் நாங்கள் அல்லர்" என அதிரை தாருத் தவ்ஹீத் சார்பாகக் கூறப்பட்டதை, "அதிரை தாருத் தவ்ஹீதுக்கு பைலா கிடையாது எனப் பொய் சொன்னதாக" நாக்கூசாமல் நடுச் சபையில் புளுகுகின்றார். இவர்தான் ததஜவின் மாநிலத் துணைத் தலைவராம்.
எண்பதுகளில் ஐஎஸ்எம், தாருத் தவ்ஹீத் போன்ற அமைப்புகளால் தமிழகத்தில் ஏகத்துவப் புரட்சி ஏற்பட்டது என்று ததஜவின் மாநிலத் தலைவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் கருப்பு-வெள்ளை வீடியோ க்ளிப் போட்டுக் காட்டப்பட்டது.
இதுவரையிலும் கேட்கப்பட்ட இரு கேள்விகளுக்கு இதுவரை ததஜ பதில் தரவில்லை என்பதை அதிரை தாருத் தவ்ஹீதின் ஜமாலுத்தீன் பதிவு செய்துள்ளார்.

No comments:

Post a Comment