கொள்கையற்றவர்கள் யார்?
அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-4 நேரம்: 12:00-12:30
இந்த அமர்விலும் ஸிஹ்ரு எனும் சொல்லுக்கு:
1. பொய்
2. கண்கட்டி வித்தை
3. ஏமாற்று
ஆகிய மூன்று சொற்கள் ததஜவினரால் தமிழாக்கப்பட்டன.
"1984இல் சூனியத்தை எதிர்த்த நீங்கள், 2014இல் சூனியம் இல்லை என்று நாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்?" எனக் கூர் மழுங்கிய கேள்வியைத் ததஜவினர் முன்வைத்தனர்.
சூனியம் உண்டு என்று ஏற்றுக் கொண்டதற்கும் சூனியத்தை எதிர்த்ததற்கும் குர்ஆனும் ஸஹீஹ் ஹதீஸ்களும் அடிப்படையாக இருந்தன; இருக்கின்றன. சூனியம் என்பது இல்லை என்பதற்கு மூன்றாவதான மனிதக் கருத்துகள் மட்டுமே ஆதாரமாக வைக்கப்படுகின்றன. எனவே, குர்ஆன் ஹதீஸுக்கு எதிரான மனிதக் கருத்தை மறுதலிக்கின்றோம்.
சூனியம் என்பது கண்கட்டி வித்தை இல்லை என்பதற்கு இறைவசனம் 15:15 தெளிவான சான்றாகத் திகழ்கிறது.
சூனியம் என்பது கண்கட்டி வித்தை இல்லை என்பதற்கு இறைவசனம் 15:15 தெளிவான சான்றாகத் திகழ்கிறது.
'சூனியம் என்பது வெறும் கண்கட்டி வித்தைதான்' எனும் தம் தலைவரின் கருத்தை நிலைநாட்டுவதற்காகத் தொண்டர்கள், இறைமறை வசனங்களையும் மறைப்பார்கள் என்பதற்கு இந்த அமர்வு தெளிவான சான்றாக அமைந்தது.
لَقَالُواْ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَارُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ 15:15
எங்கள் பார்வைகள்தாம் மயக்கப்பட்டு விட்டன. இல்லையில்லை - நாங்கள் சூனியம் செய்யப்பட்ட கூட்டமாகிவிட்டோம் எனக் கூறுவார்கள். 15:15.
பார்வை மயக்கப்படுவது வேறு; சூனியம் என்பது வேறு எனப் பிரித்துக் காட்டும் "இல்லையில்லை بَلْ " எனும் அல்லாஹ்வின் சொல்லை வேண்டுமென்றே தவிர்க்கும் வித்தையைப் புரிந்துகொள்ளுங்கள்!
வழிகேட்டிலிருந்து விலகிவிடுங்கள்!
No comments:
Post a Comment