அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.14 முதல் அமர்வு
கொள்கையற்றவர்கள் யார்?
அதிரை தாருத் தவ்ஹீத் vs ததஜ விவாதம் - 27.10.2014 முதல் அமர்வு - உரை-6 நேரம்: 13:00-13:30
இந்த அமர்வில், அல்லாஹ்வின் ஒரு பண்பு வேறு யாருக்கும் இருக்கிறது என்று நம்பினாலோ சொன்னாலோ அவர் முஷ்ரிக் என்றும் சூனியக்காரனுக்கு அல்லாஹ்வின் பண்பு இருப்பதாகக் கூறப்படும் ஸஹீஹான ஹதீஸை நம்புவதால் அதிரை தாருத் தவ்ஹீத் ஷிர்க்கில் இருப்பதாகவும் ததஜ சார்பில் வலிந்துரை செய்யப்பட்டது.
அதற்கு பதிலாக, "தஜ்ஜாலின் வருகை பற்றிய ஹதீஸை ஸஹீஹ் என்று ததஜ நம்புகிறதா?" என்ற கேள்வி தாருத் தவ்ஹீத் சார்பாக பிற்பாடு வைக்கப்பட்டு, "ஆம், நம்புகிறோம்" என பதிலும் பெறப்பட்ட பின்னர்,
வானிலிருந்து மழையைப் பொழியச் செய்வது (78:14),
பூமியிலிருந்து தாவரங்களையும் தானியங்களையும் விளைவிப்பது (78:15),
உயிர் கொடுப்பது;
மரணிக்கச் செய்வது (3:156)
ஆகிய அல்லாஹ்வின் நான்கு பண்புகள் தஜ்ஜாலுக்கு இருக்கும் எனக் கூறப்படும் ஹதீஸ், மேற்காணும் அல் குர்ஆன் வசனங்களோடு நேரடியாக மோதுவதாக உள்ளது. குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸை ததஜ, 'ஸஹீஹ்' என்று நம்புகிறது. மேலும், மேற்காணும் நான்கு செயல்களையும் எவ்விதப் 'புறச் சாதனமும்' இல்லாமல் தஜ்ஜால் செய்வான் என்று அறிவுக்குப் பொருந்தாதையும் ததஜ நம்புகிறது,
எனவே, ததஜவினர் நான்கு மடங்கு முஷ்ரிக்குகள் என சுய வாக்குமூலம் அளித்து, "கொள்கையற்ற ததஜ" என்பதை அவர்களே நிறுவியுள்ளனர்.
No comments:
Post a Comment