மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனி மின்னஞ்சலுக்கும் :
மரியாதைக்குரிய ஐயா,
கந்தூரி காலத்தில்
வழக்கமாகப் பட்டுக்கோட்டை வட்டாட்சியரிடமிருந்து இரு நாட்களுக்கு முன்னர்
அழைப்பாணை அனுப்பப்பட்டு, கந்தூரிக்கு ஒருநாள் முன்னர் அமைதிப்
பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் எங்களுடைய கருத்துகளும் கோரிக்கைகளும்
கேட்கப்படும். இவ்வழக்கம் கடந்த பதினொரு ஆண்டுகளாக நடைமுறையில்
இருந்துவருகின்றது.
ஆனல், இம்முறை கந்தூரி தினமான
இன்று (18.8.2023) பகல் 2:30 வரை எங்களில் யாருக்கும் அழைப்பாணை
அனுப்பப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக அறிகின்றோம்.
No comments:
Post a Comment