Monday 2 February 2015

"இன்னும் கெட்டுப் போவோம்; என்ன பந்தயம்?" எனக் கேட்கும் கூட்டம்

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்!


இஸ்லாம் என்றால் என்னவென்றே தெரியாமல், மவ்லிது பாட்டுகளை மட்டும் பாடி 'முஸ்லிம்'களாக வாழ்ந்து கொண்டிருந்த எத்தனையோ கிராமங்கள் திருந்தி மவ்லிதை ஒழித்துக் க்ட்டிவிட்டன.


ஆனால், ஆலிம்கள் 'பெருத்த' ஊரான அதிராம்பட்டினத்தின் 'நடு' செண்ட்டரில் உள்ள நடுத்தெருவின் செக்கடிப்பள்ளியில் என்றும் இல்லாத புது வழக்கமாக இன்று 2.2.2015 காலையில் மவ்லிதுக் கச்சேரி துவங்கப்பட்டுள்ளது.


கல்யாண வீட்டில் மாப்பிள்ளையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை; இழவு வீட்டில் பிணமாக இருக்க வாய்ப்பிருந்தால் போதும் என்று முண்டிக்கொண்டு முன்வருகின்றவர்கள் ஊரின் பிரபலங்களாக உருவாகிவிட்டதாலும் தங்கள் வயிறு நிறைந்தால் போதும்; கச்சேரியில் கொஞ்ச நேரம் கத்திவிட்டு, வாய்க்குக் கிடைப்பதை வாரிச் சுருட்டலாம் என்ற ஒரே நிய்யத்தில் வாழ்க்கையை ஓட்டுகின்ற 'ஆலிம் சாக்கள்' இன்னும் திருந்தாததாலும் மவ்லிது கச்சேரி மீண்டும் தலையெடுத்து ஆடுகிறது.


இந்த ஆட்டம் தானாக நிற்குமா? யாரேனும் முன்வந்து தடுத்து நிறுத்த வேண்டுமா?


مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
"உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்; முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்); அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இதுவே உறுதியற்ற இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும் என்று என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்"

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி). முஸ்லிம் 70

No comments:

Post a Comment